Wednesday, February 10, 2016

எவன்டா எவன்டா

பல்லவி

எவன்டா எவன்டா
நான் எமன்டா எமன்டா
எவன்டா எவன்டா
நான் எமன்டா எமன்டா

துரத்தித் துரத்தி வாரேன்
தூக்கில் ஏத்தப் போறேன்
விரட்டி விரட்டி வாரேன்
விடாமல் கொல்ல போறேன்

எவன்டா
நான் எமன்டா!

சரணம் 1

பணத்தின் பின்னாலே மனிதா செல்கிறாய்
உனக்கு பணம் தான் எமன்
மதுவின் பின்னாலே மயக்கமாய் செல்கிறாய்
உனக்கு மதுதான் எமன்

கண்ணுல பொய் வச்சி சிரிக்கிறாய்
உனக்கு பொய்தான் எமன்
பெண்ணுல கண் வச்சி மோசமா திரியிறாய்
உனக்கு பெண்தான் எமன்

உயிரைப் பறித்தால்தான் நான் எமனா
இல்லை ஆசை மீறினாலும் எமன்டா எமன்டா!


சரணம் 2

பொறாமை கொண்டு வாழும் மனிதா
உனக்கு குணம்தான் எமன்
உயிருக்கு விலை பேசும் மனிதா
உனக்கு கொலைதான் எமன்

துரோகத்தை பயமின்றி செய்கிறாய்
உனக்கு போலிதான் எமன்
அதிகாரம் கிடைத்தால் அடிமையாக்குறாய்
உனக்கு ஆணவம் எமன்

உயிரைப் பறித்தால்தான் நான் எமனா
இல்லை நீதி தவறிடினும் எமன்டா எமன்டா!

No comments:

Post a Comment