Wednesday, February 10, 2016

நான் என்னத்த சொன்னேன்

பல்லவி

பெண்  
என் எண்ணத்த சொன்னேன்
 நீ என்னத்த நெனச்சே?
ஆண்  
உன் கன்னத்த பாத்து
அந்த வண்ணத்தில் தொலஞ்சேன்

சரணம் 1

பெண்  
வரைமுறை இன்றி வாலிபத்தின்
 வாசத்த காண்போமா?
ஆண்  
கலங்கர ஒளியா நாம் மாறி
காதல சேர்ப்போமா?

பெண்  
விடுமுறை என்பதே இல்லாம
 நானும் உன்ன நினைப்பேன்
ஆண்  
விடுதலை தந்திய இயலாம
விரும்பியே உன்ன அணைப்பேன்

சரணம் 2

ஆண்  
காற்றாய் நானும் உருமாறி
 உனக்குள் நுழைந்திடவா
பெண்  
பாட்டாக நான் எனை மாற்றி
உனக்குள் கலந்திடவா

ஆண்  
இலக்கியமாய் நீ நுழைந்தாயே
நான் இலக்கணம் ஆகிவிட்டேன்
பெண்  
தவமின்றி நீ கிடைத்தாயே நான்
தலைக்கனம் ஆகிவிட்டேன்

No comments:

Post a Comment