Sunday, January 17, 2016

தலைவன்னா யாருடா

பல்லவி

தலைவன்னா யாருடா
தப்பு பண்ணாத ஆளடா
இவன் எங்க சொத்துடா
கைவிரலு பத்துடா ஆ.

சிங்கத்த கண்டது யாருடா
இவன வந்து பாருடா..
பண்றது எல்லாம் வித்த டா
எங்களோட சொத்துடா..

சரணம் 1

ஒன்னும் ஒன்னும் ரெண்டுடா
அவன் ரெண்டு கண்ணும் மின்னும்டா
ரெண்டும் ரெண்டும் நாலுடா
இவன் ஆகாயம் போன்ற ஆளுடா..

சூரியன் நமக்கு தூரம்டா
இந்த சூரன் நமக்கு வீரன்டா
மனிதம் மதிக்கும் யாவரையும்
மறவா கருணைக் காரன்டா

சரணம் 2

நாலும் ரெண்டும் ஆறுடா
இவன் கனிவில் காயம்; ஆறும்டா
எட்டும் ரெண்டும் பத்துடா
இவன் கோபத்தில் தண்ணீர் பத்தும்டா

கரு கொண்ட உயிரடா
துயில்வது பத்து மாதம்டா
இவன் சொல்லும் ஒரு வரியில்
தோன்றுமே பத்து வேதம்டா


No comments:

Post a Comment