Sunday, December 13, 2015

அதிகாலை பொழுது எல்லாம்


பல்லவி

அதிகாலை பொழுது எல்லாம்
அழகாக விடியுதிப்போதான் ஓ ஓ ஓ
ஸ்ருதி சேர;ந்த பாடல்போல
வாழ்க்கையும் இனிக்குது இப்போதான் ஓ ஓ ஓ

இதுபோல நானே
இருந்ததில்லைதானே
இதுபோல நானே நானே
இருந்ததே இல்லைதானே

சரணம்

கண் ரெண்டும் மோதும்போதும்
நாணம்தான் எழுகிறதே
பூவோடு கைகள்கோர;த்து
வாழ்ந்திடத்தான் பிடிக்கிறதே

மழைத்தூறல் வந்தாலே
நனைந்திடத்தான் தோன்றிடுதே
விண்மீன்கள் போல என்றும்
மின்னிடத்தான் தோன்றிடுதே

இதுபோல ஆஆஆ எத்தனையோ ஒஒஒ
ஆசைகள் உள்ளுக்குள்ள
நான் வளர;த்த கற்பனைகள்
தலையாட்டும் நெஞ்சுக்குள்ள..

இதற்கெல்லாம் காரணம் என்ன
சொன்னால் புரியுமா...
நீதானே நீதானே இதயக் கள்வனே .....

No comments:

Post a Comment